Saturday, September 20, 2008




அம்மா அப்பா அருகில் இருந்தால்
தொலைபேசியில்
அளவாகப்பேசுகிறாய்....

வேறயென்ன? வேறயென்ன?
என்று அடிக்கடிகேட்டு
தொடர்பை துண்டிக்க நினைக்கிறாய்...

யாருமே இல்லையென்றால்
குழந்தையாய் குதுகலித்து
எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைக்கிறாய்..

காச்சல் வந்தபோது
இரவெல்லாம் மிகவும் கஸ்ட்டப்பட்டேன்
துண்டு துண்டாய் ஏதேதோ கனவுகள்
பாதியிரவில் எழுந்து
உன் நினைவுகளில்
எனை நுழைத்தேன்..
வேதனை மாறி மகிழ்ச்சி
உன்னுடன் பேசவேண்டும்என
தட்டுத்தடுமாறி தொலைபேசியை
தேடி எடுத்தேன்
தற்செயலாய் நேரம்பார்த்தபோது
நீ தூங்கிக்கொண்டிருப்பாய் எனதெரிந்தது...
காத்திருக்கிறேன் எப்போது விடியும் நமக்கு என