Friday, April 11, 2008





எத்தனைநாள்
பேனாவுடன் கண்விழித்தும்
வாராத கவிதை
உண் கடைக்கண்பார்வையில்
காட்டாறாய் உடைத்ததென்று


முள்ளை முள்ளால்
ஏடுப்பதுபோல்
என் இதயத்து வலிகளைக் களையும்
மருந்தாய் வந்தாயோ?


பட்ட மரம் துளிர்விடுமா?
பாலை சோலையாகுமா?
ஆகிறதே
பெண்கள் நீங்கள்
மனது வைத்தால்....

பள்ளிக்குழந்தை போல



பள்ளிக்குழந்தை
வீடு செல்லத்துடிப்பதுபோல
எப்போது மணி ஐந்தாகும்
என காத்திருக்கிறேன்
ஓடி வந்து உனை அணைக்க