Sunday, July 29, 2007

சைக்கிள்


ஒவ்வொருத்தரும் மோட்டசைக்கிள் கார் என்று வாங்கின உடன சைக்கிள மறந்திட்டம.; ஆனா ஒரு காலத்தில
சைக்கிள் பெரிய விடயமா இருந்தது. அப்ப நாங்கள் பள்ளிக்கூடம் போற வயசு. சில பணக்காரப்பெடியங்கள்

சைக்கிள்ளை வருவாங்கள். நாங்கள் எல்லாம் வெயில தேஞ்ச செருப்போட நடந்து வருவம். அவ்வப்போது
அப்பாவிடம் குட்டிச்சைக்கிள் வாங்கித்தரச்சொல்லிக்கேப்பம��
. அவரும் இந்தா அந்தா என்று எங்களை நல்லா
ஏமாத்துவார்.


அப்ப "சொப்பர்" சைக்கிளுக்குத்தான் நல்ல மரியாதை. அதுக்கு முன் சில்லு சின்னன். பின் சில்லு பெரிசு. முன்னால ஒரு சின்னக் கூடை இருக்கும். வேகத்தை மாற்ற கியர் கூட இருக்கும். சீட் மற்ற சீட் போல இல்லை சைக்கிள் ஓடுறவவை பின் பக்கம் சாயக்கூடிய மாதிரி இருக்கும். அந்தச் சைக்கிள் ஓடுற பெடியள் பெட்டையளை எல்லாம் ஏக்கமா பாப்பம். வாழ்நாளில ஒருக்கா அதை ஓட வேண்டும் என்று சரியான ஆசை. ஆனா அது கடைசிவரை நிறைவேற வில்லை.

பிறகு ஒரு சைக்கிள் வந்தது அது "பறக்கும் புறா" அதுகும் நல்ல வடிவான சைக்கிள். வெள்ளை நிறம். நல்லூர்த்திருவிழாக்காலத்தி��
நல்லூர் கல்யாண மண்டபத்தில அதை லொத்தர்ல போடுவார்கள். கடைசி நாள்
தான் குலுக்கல். ஒரு ரூபா டிக்கெட் வாங்கிட்டு தினமும் கோவில் போகேக்கையும் வரேக்கையும்
அதைப்பாத்துக்கொண்டு நிப்பம். முருகனிட்டை அது எங்களுக்கு விளவேண்டும்என்று கந்தஸஷ்டி கூட படிச்ச
ஞாபகம். ஆனா எங்களுக்கு முருகன் கடைசி வரை கண்திறக்க வில்லை.

யாழ்ப்பாணம் டவுனுக்குப்போனா சைக்கிள் விக்கிற கடையள் கஸ்தூரியார் ரோட்டில இருக்கும். ஒவ்வொன்றா தொட்டு விலை கேட்டுபோட்டுதான் வருவம்.

எங்கடை அப்பாட்டை ஒரு பழைய ரலி சைக்கிள இருந்தது அதை அப்பா மத்தியானம் சாப்பிட வாற நேரத்தில
எடுத்து ஓடுவம். சிலவேளை விழுத்தி காண்டிலை நெளிச்சு வைப்பம் இல்லை என்றா செயின் கவரை நெளிச்சு
வைப்பம். அப்பா வந்து அவசரமா சைக்கிள எடுக்கேக்கை செயின் களன்றிருக்கும் காண்டில் நெளிஞ்சிருக்கும்.
கோவத்தில அப்பா பேசுவார்.

சைக்கிள் பெரிசா இருக்கிறதால பாறுக்கால காலைவிட்டுதான் ஓடுவம். சில சின்னன்கள் முழுசா பெடல் போட கால்
எட்டாம பாதி மட்டும் உளக்குவினம். ஒருகை சீட்டை பிடிச்சு இருக்கும் ஒரு கை காண்டில பிடிச்சு இருக்கும்.
முன்னால வாறவை எல்லாம் பயப்பிடுவினம். பாறுக்கால காலைவிட்டு ஓட்டி ஒரு கிழமை கழிச்சுத்தான் பாறுக்கு
மேலால காலைவிட்டு ஓட்டுவம். சீட்டில இருந்தா பெடல் காலுக்கு எட்டாது. கால் வலிச்சா பார்ல இருப்பம் இல்லை
எண்டா நல்லா வேகமா ஓடிட்டு சீட்டில இருப்பம். அவசரத்துக்கு நிறுத்த முடியாது வேலில போய் மோதி விழுவம். முள்ளுக்கம்பி வேலி இல்லை என்டா கள்ளிச்சொடிப்பத்தைல விழுந்தா அவ்வளவுதான். இதுல நாய் துரத்தினா சொல்லவேண்டாம்.

வீட்டுக்கு கிட்ட இருந்த ஒரு சைக்கிள் கடையில சின்னச்சைக்கிள் வாடைக்கு குடுப்பார்கள். ஒரு மணித்தியாலத்தி;ற்கு ஒரு ரூபாதான். ஆனா அதை எடுத்து ஓட்டுவது பெரிய விசயம். தனியாப்போனக் குடுக்க மாட்டாங்கள். அப்பாவை இதுக்காக கூட்டிட்டுப்போக வேண்டும்;. இரண்டு தடவைதான் ஓட்டியிருப்பன்.

பிறகு எங்கடை உறவினர் ஒருவர் வெளிநாடு போக முயற்சிச்சார். அவர் தன்னோட சைக்கிளை எனககுத்தந்தார்.
அது அவரொட அப்பா பயன்படுத்திய ராலி சைக்கிள். இரும்பு கலர்லதான் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமா காசு
சேத்து ஒவ்வொன்றா திருத்தினன். என்ட கஸ்ட காலம் அவர் அடிக்கடி கொழும்பு வைரக்கும் போட்டு திரும்பிடுவார். ஒவ்வோருக்காவும் வந்து வாங்கிட்டுப்போயிடுவார். இருந்தாலும் நான் மண் எண்ணையில கலந்து கறுப்புப்பெயிண்ட்
அடிச்சு, சீட் கவர் போட்டு, முன் சில்லுக்கும் பின் சில்லுக்கும் கலர்ப்புூ போட்டு வைத்திருந்தன். முன்பக்க பாறுக்கு வயர் சுற்றி வடிவா இருந்தது. பிறகு அவர் ஒருமாதிரி வெளிநாடு போய்சேர அந்தச்சைக்கிள் என்ர கைக்கு முழுசா வந்து சேர்ந்துது.

அதுக்குப்பிறகு எப்பவும் அந்தச்சைக்கிள் கூட வரும். வீட்டுக்கையும் சைக்கிள் ஓடுறன் என்று அம்மா பேசுவா. அதை அலங்கரிச்சு துடைச்சுக்கழுவி அதோடைதான் வாழ்க்கை போச்சு. எத்தனையோ முறை இடம்பெயரேக்கையும் அதில தான் போவம். சிலவேளைகளில் அம்மாவை முன்னுக்கும் அக்காவைப் பின்னுக்கும் வைத்துக் கூட்டிட்டுப்போவன். எப்பவும் ஒரு காத்துப்;பம்பையும் எடுத்துட்டுப்போவம். டயர் தேஞ்சு போன காலத்தில ரெண்டு ரயர் போட்டு அதை ஓடியிருக்கிறன்.

நான் இந்தியாவிற்கு அகதியா போகேக்கை அதை வாங்கி ஓட அங்கை யாருமே இல்லை. எங்கடை வீட்டில
என்னோட அறையில விட்டுட்டு போயிட்டன். பதினஞ்சு வருசத்திற்குப்பிறகு அப்பாவும் அம்மாவும் வீட்டைப்பாக்கப்போனவை. டெலிபோன்ல கதைக்கேக்கை அம்;;;;மா சொன்னா செல் விழுந்து அந்தச்சைக்கிள் நசிஞ்சு
போயிருக்க வேண்டுமாம். பின்னால உடைஞ்ச சாமான்களோட அதுகும் கறல்கட்டிக்கிடக்;கிதாம்.