என் நாட்குறிப்பில்கிறுக்கியது
7
அன்று தூக்கம் தொலைந்தது
என் கண்களுக்குள்ளே
நீ பார்த்தபார்வை
ஏதோ அவை சொல்லவிளைந்தனவே?
உனக்குள்ளும் காதல்
ஊமையாய் இருக்கிறதோ?
நான் படும் வேதனைகள்
உன்னையும் வாட்டுகின்றதா...?
விடிந்தபோது என்விழியில் உன்விம்பம்
எங்கு நோக்கிலும் நீ
உன் பேச்சு.. உன் சிரிப்பு...
'எப்போது உன்முகம் பார்பேன்?'
கெஞ்சியது என்மனம்...
'நேற்றுத்தானே பார்த்தாய்
இன்றே எப்படி..?'
'எதைப்பற்றியும் கவலையில்லை...
உன்னைப்பார்க்கவேண்டும்'
எனக்குள்ளே சண்டை
மனதுக்கும் மனசாட்சிக்கும்..
மனசாட்சி தோற்றுப்போனது...
பல்விளக்கவில்லை...
முகம் கழுவவில்லை...
கலைந்த தலைவாரவில்லை..
கையில் கிடைத்த சேட்டைமாட்டி
வெளியேவந்துவிட்டேன
ஏழு மணிக்கு
நீ அரசடிவீதிக்கு படிக்கவருவாய்
பார்த்துவிடலாம்..
பார்த்தே ஆகவேண்டும்...
செய்தித்தாள் ஒன்றைவாங்கிக்கொண்டு
தபால்பெட்டி அருகில் நின்றுகொண்டேன்..
உன்தோழிகள் குளாம் சென்றது
நீ அதில் இல்லை....
என்னாயிற்று உனக்கு?..
எனமனது படபடத்தது....
கவலை வந்துஒட்டிக்கொண்டது..
வீடுவந்துவிட்டேன்
எதோ கேட்ட தம்பியிடம்
எரிந்துவீழுந்தேன்...
ஒருநாள்
இரண்டுநாள்
மூன்றுநாள்
நான்குநாள்
பொறுமை காத்தேன்
நாட்கள் எல்லாம்
வருடங்களானது எப்போது...
ஒவ்வொரு மணித்துளியும்
நரகத்தில் கழித்தேன்
ஒருவாறு என்வாழ்வில்
வெள்ளிவந்தது...
என்னைப்பார்ததுதான்
உன்விழியில் என்ன ஒளி
குழந்தைபோல் ஓடிவந்தாய்
என்னருகில்...
உன்கையை
இறுகப்பிடித்துக்கொண்டேன்
விட்டுவிட்டால்
என்னுயிர் போய்விடலாம்
கைகளுக்கூடே மின்சாரம்
இதயம்
மீண்டும்
இயங்கத்தொடங்கியது
"........ உன்னைப்பார்க்காமல்
ஒரு நொடி கூட
என்னால்இருக்கமுடியவில்லை...
உன்னோடுதான்
என்வாழ்வு அமையவேண்டும்..."
"ஏற்றுக்கொள்வாயா?"
நீ என் கைகளை இறுகபிடித்துக்கொண்டாய்..
உன் கண்களில் இரண்டுதுளி கண்ணீர்
ஏதோ சொல்லவந்தாய்
வார்த்தைகள்
வெளியேவரவில்லை
கனிவாகப்பார்த்தாய்
பின்
என் கைகளை எடுத்து
யாரும் பார்க்காதபோது முத்தமிட்டாய்..
உன் மனதில்
மகிழ்ச்சி
வெட்க்கம்
ஒராயிரம் உணர்ச்சிகள்
ஒன்றாய்...
அன்று
முடிவுசெய்தோம்
வாரத்தில் நான்கு தடவை
பாhப்பது என்று
அந்த நான்குநாட்கள் மட்டும்சுவாசிக்கும்
ஒரு புது ஜீவராசியாய் நான்
வலம் வந்தேன்
நூலகம்
கோவில்
இந்த இரண்டிலும் தான் எமது
சந்திப்புத்தொடாந்தது..
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு உணர்ச்சி
அன்று மீண்டும்
நாட்டில் வன்முறை வெடித்தது
இந்திய இராணுவம்
ஏற்படுத்திச்சென்ற
கறைகள் ஆறும் முன்பே
மீண்டும் ஒரு போர்
இலங்கை இராணுவத்தின்
அராஜகம் ஆரம்பித்துவிட்டிருந்தது...
உன்னைப்பார்ப்பது
தடைப்பட்டுப்போனது
முதலுதவிப்படையினருடன்
நானும் இணைந்து
காயம்பட்ட சகோதரர்களை
பராமரிக்கும் பணியில்
ஈடுபட்டிருந்தேன்...
ஒருநாள் இரவு
கொஞ்சம் நேரம்கிடைத்தது
ஓடி வந்தேன்
எப்படியும்
பார்த்துவிடுவது என்று
உன் வீடு
புூட்டிக்கிடந்தது....
நீஙகள்
இடம்பெயர்ந்துவிட்டதாக
சொன்னார்கள் ...
உன் வீடு
புூட்டிக்கிடந்தது....
நீஙகள்
இடம்பெயர்ந்துவிட்டதாக
சொன்னார்கள்
எங்கு சென்றாய் என்று
தெரியவில்லை...
மனம் நொடிந்து பொனது...
எதுவும்
செய்யப்பிடிக்கவில்லை
வீட்டிலே முடங்கிக்கிடந்தேன்...
நாட்கள் செல்லச்செல்ல
போர் வலுப்பெற்றது...
நாங்களும் இடம்பெயர்ந்தோம்
ஒருநாள் அப்பா
என்னையும்
என் தம்பியையும்
இந்தியாவிற்க்கு போக
ஏற்பாடுசெய்துவிட்டுவந்திருந்தார்
அம்மா போய்விடும்படி
கெஞ்சினாள்....
இந்தியா வந்து
என் படிப்பைத்தொடர்ந்தேன்
இலங்கையில்
இருந்த
இரண்டொரு நன்பர்களுக்கும்
உன்விபரம் தெரியவில்லை...
உன் முகவரிக்கு
நான் போட்ட
கடிதங்கள் எதுவும்
பதில்கொண்டுவரவில்லை...
இன்று நீ
எங்கே இருக்கின்றாயென்று
எனக்குத்தெரியாது...
பதின்மூன்றுவருடங்கள்
பறந்தோடிவிட்டன..
மனதில்
உன்முகம் கொஞ்சம்
மங்கலாகிப்போய்விட்டதுண்மை...
எப்போதாவது
தனிமையில் உன்னைநினைப்பேன்..
அப்போது மட்டும்
இதயம் கனத்துப்போய்விடும்...
அப்போழுதுதெல்லாம்
ஆண்டவனைவேண்டிக்கொள்வேன்
நீ மகிழ்ச்சியாக வாழவேண்டும்
என்னை மறந்துவிட்டிருக்கவேண்டும்
முற்றும்
அன்று தூக்கம் தொலைந்தது
என் கண்களுக்குள்ளே
நீ பார்த்தபார்வை
ஏதோ அவை சொல்லவிளைந்தனவே?
உனக்குள்ளும் காதல்
ஊமையாய் இருக்கிறதோ?
நான் படும் வேதனைகள்
உன்னையும் வாட்டுகின்றதா...?
விடிந்தபோது என்விழியில் உன்விம்பம்
எங்கு நோக்கிலும் நீ
உன் பேச்சு.. உன் சிரிப்பு...
'எப்போது உன்முகம் பார்பேன்?'
கெஞ்சியது என்மனம்...
'நேற்றுத்தானே பார்த்தாய்
இன்றே எப்படி..?'
'எதைப்பற்றியும் கவலையில்லை...
உன்னைப்பார்க்கவேண்டும்'
எனக்குள்ளே சண்டை
மனதுக்கும் மனசாட்சிக்கும்..
மனசாட்சி தோற்றுப்போனது...
பல்விளக்கவில்லை...
முகம் கழுவவில்லை...
கலைந்த தலைவாரவில்லை..
கையில் கிடைத்த சேட்டைமாட்டி
வெளியேவந்துவிட்டேன
ஏழு மணிக்கு
நீ அரசடிவீதிக்கு படிக்கவருவாய்
பார்த்துவிடலாம்..
பார்த்தே ஆகவேண்டும்...
செய்தித்தாள் ஒன்றைவாங்கிக்கொண்டு
தபால்பெட்டி அருகில் நின்றுகொண்டேன்..
உன்தோழிகள் குளாம் சென்றது
நீ அதில் இல்லை....
என்னாயிற்று உனக்கு?..
எனமனது படபடத்தது....
கவலை வந்துஒட்டிக்கொண்டது..
வீடுவந்துவிட்டேன்
எதோ கேட்ட தம்பியிடம்
எரிந்துவீழுந்தேன்...
ஒருநாள்
இரண்டுநாள்
மூன்றுநாள்
நான்குநாள்
பொறுமை காத்தேன்
நாட்கள் எல்லாம்
வருடங்களானது எப்போது...
ஒவ்வொரு மணித்துளியும்
நரகத்தில் கழித்தேன்
ஒருவாறு என்வாழ்வில்
வெள்ளிவந்தது...
என்னைப்பார்ததுதான்
உன்விழியில் என்ன ஒளி
குழந்தைபோல் ஓடிவந்தாய்
என்னருகில்...
உன்கையை
இறுகப்பிடித்துக்கொண்டேன்
விட்டுவிட்டால்
என்னுயிர் போய்விடலாம்
கைகளுக்கூடே மின்சாரம்
இதயம்
மீண்டும்
இயங்கத்தொடங்கியது
"........ உன்னைப்பார்க்காமல்
ஒரு நொடி கூட
என்னால்இருக்கமுடியவில்லை...
உன்னோடுதான்
என்வாழ்வு அமையவேண்டும்..."
"ஏற்றுக்கொள்வாயா?"
நீ என் கைகளை இறுகபிடித்துக்கொண்டாய்..
உன் கண்களில் இரண்டுதுளி கண்ணீர்
ஏதோ சொல்லவந்தாய்
வார்த்தைகள்
வெளியேவரவில்லை
கனிவாகப்பார்த்தாய்
பின்
என் கைகளை எடுத்து
யாரும் பார்க்காதபோது முத்தமிட்டாய்..
உன் மனதில்
மகிழ்ச்சி
வெட்க்கம்
ஒராயிரம் உணர்ச்சிகள்
ஒன்றாய்...
அன்று
முடிவுசெய்தோம்
வாரத்தில் நான்கு தடவை
பாhப்பது என்று
அந்த நான்குநாட்கள் மட்டும்சுவாசிக்கும்
ஒரு புது ஜீவராசியாய் நான்
வலம் வந்தேன்
நூலகம்
கோவில்
இந்த இரண்டிலும் தான் எமது
சந்திப்புத்தொடாந்தது..
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு உணர்ச்சி
அன்று மீண்டும்
நாட்டில் வன்முறை வெடித்தது
இந்திய இராணுவம்
ஏற்படுத்திச்சென்ற
கறைகள் ஆறும் முன்பே
மீண்டும் ஒரு போர்
இலங்கை இராணுவத்தின்
அராஜகம் ஆரம்பித்துவிட்டிருந்தது...
உன்னைப்பார்ப்பது
தடைப்பட்டுப்போனது
முதலுதவிப்படையினருடன்
நானும் இணைந்து
காயம்பட்ட சகோதரர்களை
பராமரிக்கும் பணியில்
ஈடுபட்டிருந்தேன்...
ஒருநாள் இரவு
கொஞ்சம் நேரம்கிடைத்தது
ஓடி வந்தேன்
எப்படியும்
பார்த்துவிடுவது என்று
உன் வீடு
புூட்டிக்கிடந்தது....
நீஙகள்
இடம்பெயர்ந்துவிட்டதாக
சொன்னார்கள் ...
உன் வீடு
புூட்டிக்கிடந்தது....
நீஙகள்
இடம்பெயர்ந்துவிட்டதாக
சொன்னார்கள்
எங்கு சென்றாய் என்று
தெரியவில்லை...
மனம் நொடிந்து பொனது...
எதுவும்
செய்யப்பிடிக்கவில்லை
வீட்டிலே முடங்கிக்கிடந்தேன்...
நாட்கள் செல்லச்செல்ல
போர் வலுப்பெற்றது...
நாங்களும் இடம்பெயர்ந்தோம்
ஒருநாள் அப்பா
என்னையும்
என் தம்பியையும்
இந்தியாவிற்க்கு போக
ஏற்பாடுசெய்துவிட்டுவந்திருந்தார்
அம்மா போய்விடும்படி
கெஞ்சினாள்....
இந்தியா வந்து
என் படிப்பைத்தொடர்ந்தேன்
இலங்கையில்
இருந்த
இரண்டொரு நன்பர்களுக்கும்
உன்விபரம் தெரியவில்லை...
உன் முகவரிக்கு
நான் போட்ட
கடிதங்கள் எதுவும்
பதில்கொண்டுவரவில்லை...
இன்று நீ
எங்கே இருக்கின்றாயென்று
எனக்குத்தெரியாது...
பதின்மூன்றுவருடங்கள்
பறந்தோடிவிட்டன..
மனதில்
உன்முகம் கொஞ்சம்
மங்கலாகிப்போய்விட்டதுண்மை...
எப்போதாவது
தனிமையில் உன்னைநினைப்பேன்..
அப்போது மட்டும்
இதயம் கனத்துப்போய்விடும்...
அப்போழுதுதெல்லாம்
ஆண்டவனைவேண்டிக்கொள்வேன்
நீ மகிழ்ச்சியாக வாழவேண்டும்
என்னை மறந்துவிட்டிருக்கவேண்டும்
முற்றும்
6 Comments:
i like this article very much.
very nice.I like this article,because i have crossed this circumstance
Athiban ,intha kavithaya ivalo alga solla ,antha valiya ,patapatapa ,ivlo correctana varthagala use panni solla ,romba nalla iruku simply u r great .ithu kavithaya illa unmaya nadanthathaa
by vidya
Wow....simply superb!! Ithu kavithaya allathu ungal kadantha kalama enbathu patriya akkarai enakku illai. But antha varthaigal...athil prathipaliththa unarvugal...avai enn manathai melliya poonkatrai varudi senrathu mattum unmai...kudave konjam valiyum vittu senrathu:-(. Anyway, thodarnthu eluthungal. Ungal kavithai nadai enaku romba pidithiruku. Wish u all the best.
Natpudan,
VT
"Mannin kanathi kavithaikalil nirainthu irukkinrathu;
Neenda naadkalukkup piraku Yaal mannil ninra unarvu;
Em valviyalin valikal pala; Avarrin pala koonankal unkal kavithaikalil undu."
"Oru kavithai kondu oru film thayaarikkalaam."Paaraddukkal.
Kind regards,
Mathavy acca
உள்ளே வந்துவிட்டால்
திரும்பிப்பார்க்க மட்டும்தான் அனுமதி
திரும்பிப்போக அனுமதியில்லை.[நன்றாக இருக்கிறது...மனதை உருகிவிட்டீர்}Uthaya Germany
ITS VERY NICE MY DEAR
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home