Friday, October 29, 2004

என் நாட்குறிப்பில் கிறுக்கியவை

1




நீ இன்று எங்கிருக்கிறாயோ தெரியாது
ஆனாலும்
என் இதயத்தில்
இன்னும் இருக்கிறாய்

பள்ளி செல்லும் நாட்களில்
நீ பார்த்துவிட்டு பாராததுபோல்
செல்வாய்...

அப்போதே எனக்கு காதல் என்று சொல்லலாம்..

ஒரு நாள் பள்ளிவிட்டு வரும்போது
பாதி வழியில் துப்பாக்கிச்சத்தம்
அது உன்வீட்டுப்பக்கம் தான்..
பதறி அடித்து ஓடிவந்தேன்..
நல்ல காலம் யாருக்கும் எதுவும் இல்லை...
ஆனால்
கூலிப்படைகளிடம் நன்றாக வாங்கிக்கொண்டேன்..
இன்றும் நான் குனிந்து நிமிர வலிக்கிறது..
அந்த வலியுடன் உன்நினைவும் சேர்ந்திருக்கிறது..




டீயுூசனில் நீ என்றும் முதல் வரிசையில்
நான் என்றும் இரண்டு வரிசை பின்னால்த்தான்..
பதில் தெரியாமல் நான் பரிதாபமாய்
எழுந்து நிற்பதை நீ பார்த்துவிடக்ககூடதே என்று..
ஆனாலும் நீ கெட்டிக்காரி
ஆசிரியர் என்னிடம் கேள்வி கேட்கவும்
சொல்லிவைத்தது போல் திரும்பிவிடுவாய்....
உன்முகம் பார்த்ததும் எல்லாமே மறந்துவிடும்
தலையைக்குனிந்து கொண்டு நான்நிற்பேன்..
ஆசிரியரின் வசைமட்டும் காதில் கேட்கும்

அதன்பிறகு கொஞ்சம் பிரிவு...




கோயில் திருவிழாவில்தான்
பின் அடிக்கடி பார்த்துக்கொண்டோம்
அப்போது தான் காதல்
உன்பக்கமும் இருந்தது தெரிந்தது.....

அன்று சாமி ஊர்வலத்துடன் நானும் கூட வந்தேன்....
உன் வீட்டு வாசல் வரவும் ஓரமாய் ஒதுங்கிக்கொண்டேன்
நான் வருவேன் என்று எதிர்பார்த்திருந்திருபந்தாய் நீ..

தீவெட்டி வெளிச்சத்தில் உன் கண்கள் என்னைத்தேடியதும்...
காணாமல் கண்கலங்கியதும்..
என் அடிமனசில்; அப்படியே உள்ளது.



ஒரு நாள் நீ சைக்கிளில் வந்துகொண்டிருந்தாய்
காற்றில் உன் தொப்பி பறந்து கீழே விழுந்துவிட்டது
நான் ஏதோ பொது சேவகன் போல ஓடிவந்து எடுத்துக்கொடுத்தேன்
நீ என் பெயர் சொல்லி நன்றி சொன்னாய்.......
எத்தனை காலம் நான் ஏங்கியிருக்கிறேன்
நீ என் பெயர் சொல்லிக்கேட்க...
என் பெயரே அன்று தான் பேறுபெற்றது....




அன்றிலிருந்து தினமும் உன்னைப்பார்க்கவேண்டும்....
ஒரு நாள் பாராவிட்டால் பைத்தியம் ஆனேன் நான்
மேற்கில் இருக்கின்ற நன்பன் வீடு செல்வதற்கும்
கிழக்கில் இருக்கும் உன்வீடு கடந்து பயணிப்பேன்
சுற்றிச்சுற்றி அங்குதான் நான் எப்பொழுதும்....
ஆனாலும் உன்வீட்டுப்பக்கம் திரும்பிப்பார்த்ததில்லை...
நீ வாசலில் நின்றாலும் பார்த்துவிட்டு
நான் பாராதது போல செல்ல முயற்சிப்பேன்
உனக்கு எல்லாம் தெரிந்திருக்கும்.....
நீ புன்னுறுவல் மட்டும் செய்வாய்...


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home