Friday, October 29, 2004

என் நாட்குறிப்பில் கிறுக்கியவை

3



காதல் விதையை
எப்படி விதைத்தாயடி என்னுள்?..

ஒரேயொரு பார்வைபார்த்ததில்
காதல் வந்திடுமோ?....

உன் அழகு என்னை ஒன்றும் செய்ததில்லையே?..

எனக்கும் உனக்கும் முன்ஜென்ம உறவோ?....
முட்டாள்தனம் இல்லையா இது?

எதற்காக வந்தது காதல்?
விடையே கிடைக்கவில்லை?




அது வானவெளி.....
அங்கே நீயும் நானும்தான்
கைகோர்த்து நடக்கிறோம்..
மனதெல்லாம் மகிழ்ச்சி
வெள்ளை மேகங்களில்
துள்ளிக்குதித்து விளையாடுகிறோம்..
இதுதான் சொர்க்கமாம்...

நீ அருகில் இருந்தால்
என் வாழ்வே சொர்க்கம்தானே...

ஓடி ஓடி
மின்னும்வெள்ளிகளைச்சேர்த்து
உன்தலையில் புூவாய் சூட்டுகிறேன்
ஐயோ கால்தவறிவிட்டதே..

கீழே அதளபாதளம்..

ஐயோ என்"..........."
உன் பெயரை உச்சரித்தபடி
கால்களை விசிறி அடிக்கிறேன்...
அட ஓலைப்பாயில் தான் படுத்திருக்கிறேன்...

அருகில் நீ இல்லை...

கனவுதான்....
எதையோ இழந்த உணர்வு....




காதல் ஒரு உன்னத உணர்வு..
அந்த உணர்வு
உன்னிடத்திலும்
என்னிடத்திலும்
ஏன் ஒவ்வொரு ஜீவராசிகளிலும்
ஆண்டவன் விதைத்துவிட்டிருக்கிறான்...

காதல் இல்லை சாதல்
என்று பாரதியே
உனக்;கும் எனக்கும்
அறிவுரை சொல்லி
சென்றிருக்கிறான்....

காதல் தானாக வரவேண்டும்
வராத காதலை
வரவைக்கவேண்டாம்
அது வேதனைகளைத்தான்
வாங்கிவரும்..

காதல் உனது வாழ்விற்கு
ஒரு உந்து சக்தி..
ஒரு பிடிப்பு...
அது நிச்சயம்
உன்னை வெற்றிக்;கு எடுத்துச்செல்லும்...

ஆனால்
காதல் வந்தது என்று
கண்மூடி
கனவில் வாழ்ந்துவிடாதே...
மயக்கத்தில் உறங்கிவிடாதே...
உன்வாழ்வில் வெற்றிக்கு வேண்டிய
அத்தனையையும் நீ தொடர்ந்து செய்..
காதல் உன் கூடவந்தால்
நீ முள்ளில் நடந்தாலும்
வலிகளே இருக்காது...

இன்றைய வாழ்வு
வேகமான வாழ்வுதான்...
இல்லை என்று சொல்லவில்லை.
இதயங்கள் தானே
இன்னும்
உனனை
இயங்கவைக்கின்றன...

காதல் என்று வந்துவிட்டால்
உறுதியாக நில்
பாதியிலே காணாமல் போய்விடாதே..
வெற்றி என்றும் உனக்குத்தான்..

காதல் என்றும் தோற்றது இல்லை..
மனிதன்தான்
அடிக்கடி
தோற்றுப்போகிறான்....

காதல்
என்றபோர்வையில்
யாரையும்
வற்புறுத்த நினைக்காதே...
பின்னால் சென்றுவருவது காதலல்ல..
அந்த உறுவுக்கு வேறு பெயர்...
அந்த வார்த்தையை நானே
தணிககை செய்கின்றேன்

காதல் தோற்றுவிட்டுது
என்றால் உன்;வாழ்வே
இருண்டுவிட்டாதாய்
எண்ணிவிடாதே....
நீ பேகும் பாதை
எப்போதும்
தெளிவாகத்தான்
இருக்கிறது...

நீ நீயாக்கத்தான்
எப்போதும் இருக்கிறாய்...
காதல் ஒரு உணர்வுதான்...
அதற்காக உன்னை
நீ அழித்துக்கொள்ளாதே..
வாழ்வைத்தொடர்

உறவுக்கள் நிறைய உனக்காக
காத்திருக்கிறது...
அங்கே உனக்காக ஒருத்தி
இருக்கத்தான் போகிறாள்....

காதல் செய் காதல் செய்...

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home