Friday, October 29, 2004

புூவாக நான் பிறந்திருந்தால்
உன் கூந்தல் ஏறி
வாழ்ந்திருப்பேன்...

காற்றாக நான் பிறந்திருந்தால்
உன் சுவாசத்தோடு கலந்திருப்பேன்

........................


நான் சுவாசிப்பதே
உன் சுவாசங்களை உள் வாங்கத்தான்

........................


உன் அருகில் நான் இருந்தால்

என் வாழ்வெல்லாம்
வசந்தம்.....


........................



எப்போதும் நீ வேண்டும்..........

......................

உன் மூச்சாக நான் இருக்கமுடியும் என்றால்
இப்பொழுதே நான் தயார்
என் உயிரைவிட...

......................

என் இதயம் ஓவ்வொரு தடவையும்
துடிக்கும் போதும்
உன் பெயரைத்தானே அழைக்கிறது...


.......................


இத்தனை காலம் தேடினேன்
இதுவரை என் கண்ணில் படாமல்
எங்கிருந்தாய்....

புூவுக்குள் புூவாக
மறைந்து இருந்தாயா?
இல்லை
வானத்து நட்சத்திரமாக வாழ்ந்திருந்தாயா?

........................


என் இதயத்திலே
கோவில் ஒன்று கட்டிவைத்தேன்

தெய்வமாக நீ வந்தாய்

தினமும் அங்கு திருவிழா

உன்பெயர் தான் நான் சொல்லும் மந்திரங்கள்

.........................

உன் நினைவுகள்
என்றும் வசந்தம்...

........................

என்
ஆயுள்
ஒருநாளில் முடிந்து போனாலும்
கவலையில்லை
உன் நெற்றியில்
ஒரே ஒரு நாள் பொட்டாக
ஒட்டிக்கொள்ள
அனுமதி தருவாயா?

......................


உன் கால் கொலுசிலிருந்து வீழ்ந்த
ஒரு வெள்ளி மணி
என்; பொக்கிசமான கதை
உனக்குத்தெரியுமா?


......................

உன் கூந்தல்விட்டு உதிர்நத
புூக்கள் எல்லாம்

என் பாடப்புத்தகத்தில் பத்திரமாக....


......................



1 Comments:

Blogger சினேகிதி said...

nalla Kavithai

July 20, 2005 at 1:59 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home