என் நாட்குறிப்பில் கிறுக்கியவை
2
உன்னுடன் பேச வேண்டும் என்பதற்காக
இரவெல்லாம் வரிகளை தேடி வைப்பேன்..
உன்னைக்கண்டதும் வார்த்தைகள் எல்லாம்
ஓடி ஒழிந்து கொள்ளும்
ஊமையாகி திக்கித்திணறுவேன்
ஆனால் உன்பார்வை
ஆயிரம் ஆயிரம் வார்த்தைகள் பேசும்
குறும்பாக எதேதோ என்னிடம் கேள்விகள் கேட்கும்
எதற்கும் என்னிடம் பதில் வந்ததில்லை...
நான்தான் ஊமையாகிவிட்டிருப்பேனே......
உன்பிறந்ததினம் இன்னும் நினைவிருக்கிறது.....
அன்று கோவிலில் உனைப்பார்த்தேன்
வெளிர் நீல நிறத்தில் ஆடையணிந்து
சன்னிதியில் கண்மூடிநின்றிருந்தாய்...
நீயே ஒரு தெய்வமாக எனக்குத்தெரிகிறாய்
நீ என்ன அந்தத்தெய்வத்திடம் வேண்டிக்கொள்வாய்
புதிராக இருந்தது எனக்கு.
நன்பர்கள் எல்லாம் என்னைக்கேலியாகப் பார்த்தார்கள்.
நான் துணிவே இல்லாதவனாம்....
இனியும் காதலை மறைத்துவைப்பது பாவமாம்
ஏதேதோ பேசிவிட்டார்கள்.....
எனக்கு கொஞ்சம் மனவருத்தம்தான்..
யார் சொன்னது நான் பேசவில்லை என்று
நான் எப்போதும் உன்னோடு பேசிக்கொண்டிருப்பது
அவர்களுக்கு எப்படித்தெரியும்....
வெள்ளிக்கிழமை
என் காதலை சொல்லிவிட முடிவு செய்தேன்
வியாழன் இரவே படபடப்பு ஆரம்பித்துவிட்டது..
சாப்பிடப்பிடிக்கவில்லை...
பதினோராயிரம் தடவை எப்படிப்பேசுவது என்று
பேசிப்பார்த்துக்கொண்டேன்......
இதயம் ஏனோ வேகமாக அடித்தது......
உடலின் வெப்பம் கொஞ்சம் ஏறிவிட்டிருந்தது...
இத்தனை நாள் உன் நினைவுகளுடன்
சுகமாகத்தூங்கியவன்
ஏன் அன்று மட்டும்
தூக்கமே தொலைந்து போனது?....
அடி மனதில் ஏதோ அரித்தெடுத்தது...
எங்கே நீ என் காதலை நிராகரித்துவிடுவாயோ
என்ற அச்சம்.
விடிய விடிய
என் மனதுக்ககுள்ளே
ஓராயிரம் போராட்டங்கள்..
ஒரே அவஸ்தை...
நான் படும் அவஸ்தைகள்
நீயும் அனுபவிக்க வேண்டுமா?
காதல் என்றால் அவஸ்தைகள் தானோ?
உன்னுடன் பேச வேண்டும் என்பதற்காக
இரவெல்லாம் வரிகளை தேடி வைப்பேன்..
உன்னைக்கண்டதும் வார்த்தைகள் எல்லாம்
ஓடி ஒழிந்து கொள்ளும்
ஊமையாகி திக்கித்திணறுவேன்
ஆனால் உன்பார்வை
ஆயிரம் ஆயிரம் வார்த்தைகள் பேசும்
குறும்பாக எதேதோ என்னிடம் கேள்விகள் கேட்கும்
எதற்கும் என்னிடம் பதில் வந்ததில்லை...
நான்தான் ஊமையாகிவிட்டிருப்பேனே......
உன்பிறந்ததினம் இன்னும் நினைவிருக்கிறது.....
அன்று கோவிலில் உனைப்பார்த்தேன்
வெளிர் நீல நிறத்தில் ஆடையணிந்து
சன்னிதியில் கண்மூடிநின்றிருந்தாய்...
நீயே ஒரு தெய்வமாக எனக்குத்தெரிகிறாய்
நீ என்ன அந்தத்தெய்வத்திடம் வேண்டிக்கொள்வாய்
புதிராக இருந்தது எனக்கு.
நன்பர்கள் எல்லாம் என்னைக்கேலியாகப் பார்த்தார்கள்.
நான் துணிவே இல்லாதவனாம்....
இனியும் காதலை மறைத்துவைப்பது பாவமாம்
ஏதேதோ பேசிவிட்டார்கள்.....
எனக்கு கொஞ்சம் மனவருத்தம்தான்..
யார் சொன்னது நான் பேசவில்லை என்று
நான் எப்போதும் உன்னோடு பேசிக்கொண்டிருப்பது
அவர்களுக்கு எப்படித்தெரியும்....
வெள்ளிக்கிழமை
என் காதலை சொல்லிவிட முடிவு செய்தேன்
வியாழன் இரவே படபடப்பு ஆரம்பித்துவிட்டது..
சாப்பிடப்பிடிக்கவில்லை...
பதினோராயிரம் தடவை எப்படிப்பேசுவது என்று
பேசிப்பார்த்துக்கொண்டேன்......
இதயம் ஏனோ வேகமாக அடித்தது......
உடலின் வெப்பம் கொஞ்சம் ஏறிவிட்டிருந்தது...
இத்தனை நாள் உன் நினைவுகளுடன்
சுகமாகத்தூங்கியவன்
ஏன் அன்று மட்டும்
தூக்கமே தொலைந்து போனது?....
அடி மனதில் ஏதோ அரித்தெடுத்தது...
எங்கே நீ என் காதலை நிராகரித்துவிடுவாயோ
என்ற அச்சம்.
விடிய விடிய
என் மனதுக்ககுள்ளே
ஓராயிரம் போராட்டங்கள்..
ஒரே அவஸ்தை...
நான் படும் அவஸ்தைகள்
நீயும் அனுபவிக்க வேண்டுமா?
காதல் என்றால் அவஸ்தைகள் தானோ?
2 Comments:
je ziet er een ongelooflijk mooi ding uit , geef hierbij veel groeten
Your poem is very nice ! congratulations !!!
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home